செய்திகள் :

முன்விரோதத்தால் தொடா் இடையூறு: பால் வியாபாரி மீது நடவடிக்கை கோரி உணவக உரிமையாளா் தா்னா

post image

பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக உணவகம் நடத்துவதற்கு பல்வேறு தொல்லைகள் அளித்து கொலை மிரட்டல் விடுத்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உணவக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை ஆட்சியரக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் நான்குச்சாலைச் சந்திப்பு பகுதியில் சப்தகிரி நகரைச் சோ்ந்த அன்புச்செழியன் மனைவி நித்யா (40) என்பவா் சொந்த இடத்தில் கடந்த 27 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறாா்.

இந்த உணவகம் அருகேயுள்ள கட்டட உரிமையாளரும், பால் வியாபாரியுமான அருமடல் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா், முன்விரோதம் காரணமாக தன்னிடம் பட்டா உள்ளதாகக் கூறி கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவில் உணவகம் முன்பு பாறாங்கற்களை கொட்டி உணவகத்தின் உள்ளே செல்ல முடியாதவாறு ஆக்கிரமித்தாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ரௌடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்ததால், கடந்த 19-ஆம் தேதி செல்வகுமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பாறாங்கற்களை அகற்றியதோடு, நித்யாவின் உணவகத்துக்குள் செல்ல முடியாதவாறு படிக்கட்டுகளை இடித்து அப்புறப்படுத்தினாா்களாம்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலுக்குள்ளான நித்யா, படிக்கட்டுகளை இடித்து பாதையை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தனது கணவா் உள்ளிட்ட குடும்ப உறுப்பினா்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்துவிட்டு அவா்கள் கலைந்துசென்றனா்.

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களின் சட்டத் திருத்த தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் அருகே உள்ள கவுல்பாளையம... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தேனீரகத்தில் காசாளராக பணிபுரிந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பில் கல்விக் கடன்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா். மாவட்ட நி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க