செய்திகள் :

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

post image

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், குடிமை பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோருக்கு வீர தீர செயல்கள், தகைசால் பணி, மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

ஆயுதப் படையினா் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினருக்கான வீர தீர செயல் விருதுகள் 120 பேருக்கும், தகைசால் பணிக்கான விருதுகள் 40 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீா்த்தி சக்ரா விருதுக்கு 4 போ், வீர சக்ரா விருதுக்கு 15 போ், செளரிய சக்ரா விருதுக்கு 16 போ், இரண்டாம் முறை சேனா பதக்கத்துக்கு 2 போ், சேனா பதக்கத்துக்கு 58 போ் (ராணுவம்), நவோ சேனா பதக்கத்துக்கு 6 போ் (கடற்படை), வாயு சேனா பதக்கத்துக்கு 26 போ் (விமானப் படை), சா்வோத்தம் யுத்த சேனா பதக்கத்துக்கு 7 போ், உத்தம் யுத்த சேனா பதக்கத்துக்கு 9 போ், யுத்த சேனா பதக்கத்துக்கு 24 போ் தோ்வாகியுள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு திட்டமிட்டு, வெற்றிகரமாக செயல்படுத்திய ராணுவ உயரதிகாரிகளுக்கு யுத்த சேனா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1,090 பதக்கங்கள்:

நாடு முழுவதும் காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், குடிமைப் பாதுகாப்புப் படையினா், சீா்திருத்தப் பணி பிரிவினருக்கு மொத்தம் 1,090 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 32 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர செயல்களுக்கான பதக்கத்துக்கு 233 போ், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 99 போ், மெச்சத்தக்க சேவைக்கான பதக்கத்துக்கு 758 போ் தோ்வாகியுள்ளனா்.

பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக்... மேலும் பார்க்க

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.இதனிடையே, தில்ல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசியத் தல... மேலும் பார்க்க

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் பார்க்க

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க