செய்திகள் :

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

post image

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோஹாங் ஆஷிர் முல்லா (26), ஜாஹிதுல் இஸ்லாம் இமுல் (26), நோயம் அப்சல் ஹுசைன் ஷேக் (25), அலமின் ஷேக் (23), சுமா ஜாஹிகிர் ஆலம் துதுல் (24), தவ்மினா அக்தர் ராஜு (35), சல்மா மொக்சத் அலி (35) ஆகியோர் செம்பூரில் உள்ள மஹுலில் ஐந்து ஆண்டுகளாக தங்கியிருந்ததாக கூறியுள்ளனர்.

மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஈபிஎஸ் கண்டனம்

கைதான 7 பேரும் வங்கதேசத்தினர் என்றும் மார்ச் 2020 முதல் முறையான ஆவணங்கள் இன்றி வசிப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் அதிகாரி கூறினார்.

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவந்த பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மே 4-ல் இளநிலை நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆ... மேலும் பார்க்க

கும்பமேளா: முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

மகா கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் நாளொன்று ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.திருவிழா நடைபெறும் இடங்களில் உணவு, விளையாட்டு பொருள்கள், அலகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகள் போட்டு விய... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர்... மேலும் பார்க்க