செய்திகள் :

முருக பக்தர்கள் மாநாடு: "பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை; முருக பக்தராக வருகிறார்" - கஸ்தூரி

post image

மதுரையில் நடைபெறுவது அரசியல் விழா அல்ல, தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றும் மாநாடு என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இன்று மதுரை வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமா?

 முருக பக்தர்கள் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடு

மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தல் பொன் சட்டியா? திமுக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால், மக்களின் பேரெழுச்சியுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டுக்கு பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது மிகப்பெரிய பெருமை. அதை திமுக அரசு ஆதரிக்க வேண்டும்.

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் அக்மார்க் மதவாதம். முருகனைப் போற்றுவோம் என்று சொல்வது ஆன்மீகம்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்கிறார்கள் என மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் என்றால், அவர்களுடைய மூதாதையர்களும் தமிழர்கள்தானே?

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

மதுரையில் மாற்று மதத்தினர் முருகன் மாநாட்டுக்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான்கள் ஆட்சியில் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகத்தான் வரலாற்றில் உள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஆ.ராசா முன் அடுக்கப்பட்ட புகார்கள்; "திமுகவில் இது சாதாரணம்" - என்ன சொல்கிறார் பெரம்பூர் எம்எல்ஏ?

தேர்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகும் வகையில் வேலைகளை இப்போதே தொடங்கி விட்டன.ஆளும் திமுகவில் மாவட்ட அளவில் கட்சியின் நடப்பு நிலவரத்தைக் க... மேலும் பார்க்க

Iran: "வலியுறுத்தினேன்..." - ஈரான் அதிபருடன் தொலைப்பேசியில் மோடி; என்ன பேசினார்?

ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அமெரிக்காவும் ஈரானின் அணு திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புக... மேலும் பார்க்க

"ஈரானுக்கு உரிமை உண்டு" - ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

நேற்று வரை, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக இருந்தது, இன்று முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக மாறியுள்ளது. ஈரானின் மூன்று அணு ஆயுத திட்டப் பகுதிகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. இதை அமெரிக்க அத... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் - நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று... மேலும் பார்க்க

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின்... மேலும் பார்க்க