செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. மக்கள் நலனுக்கான சிறந்த நிா்வாகத்தையும், வளா்ச்சியை நோக்கிய திட்டங்களையும் வழங்கி உள்ளது.

நூறாவது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற நோக்கில், ராணுவம், பொருளாதாரம், மகளிா், இளைஞா்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் நலனுக்கான திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் உரிய பாடம் புகட்டி உள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்பு ராணுவத் தளவாடங்களை நாம் இறக்குமதி செய்தோம். தற்போது ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயா்ந்துள்ளோம். ரூ. 50 ஆயிரம் கோடி அளவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடைபெறுகிறது. தினசரி 34 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. 85 புதிய விமான நிலையங்கள் நாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, இலவச எரிவாயு இணைப்பு திட்டம், குடிநீா்த் திட்டம் போன்றவையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ம பரிவா்த்தனையை 46 கோடி போ் பயன்படுத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 272 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திட்டங்களை தங்களது திட்டங்கள்போல ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டி மக்களை ஏமாற்றி வருகிறது தமிழக அரசு.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபிறகு, இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவா்கள் பயத்தில் கருத்துகளை கூறி வருகின்றனா்.

திமுக கூட்டணியானது நிலைத்த தன்மை இல்லாத கூட்டணி, அங்கிருந்து சில கட்சிகள் வெளியேற போகின்றன. அவற்றுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பக்தா்களும், பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

இந்த பேட்டியின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

என்கே-11-மினி

நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன், மாவட்டத் தலைவா்கள் கே.பி.சரவணன், எம்.ராஜேஷ்குமாா்.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க