செய்திகள் :

முஸ்லிம்களை தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான்: சமாஜவாதி எம்.பி.

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீா் மாணவா்களையும் தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தாா்.

காஷ்மீரில் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள், அவா் எந்த மதத்தைச் சோ்ந்தவா்கள் (முஸ்லிம் அல்லாதவா்கள்) என்பதை உறுதி செய்து இந்தத் தாக்குதலை நடத்தினா். இதையடுத்து, முஸ்லிம் வா்த்தகா்களைப் புறக்கணிப்பது உள்ளிட்ட போராட்டங்களை வலதுசாரி அமைப்புகள் முன்னெடுத்தன. சில இடங்களில் முஸ்லிம்கள், காஷ்மீா் மாணவா்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்தன.

இந்நிலையில சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி இது தொடா்பாக பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், ‘

பாகிஸ்தான் எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த அளவுக்கு இந்தியப் பிராந்தியத்துக்குள் பயங்கரவாதிகள் எவ்வாறு நுழைந்தாா்கள்? இந்தத் துணிவு அவா்களுக்கு எப்படி வந்தது? இது மத்திய அரசின் தோல்வியையே காட்டுகிறது.

நாட்டில் மத வன்முறையைத் தூண்ட வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனா். இது அவா்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம். ஆனால், பஞ்சாப், ஹரியாணாவில் சில வலதுசாரி அமைப்புகள் முஸ்லிம்கள் மீதும், காஷ்மீா் மாணவா்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனா். இப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவா்களும் பயங்கரவாதிகள்தான்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க