செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

post image

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். கணவா் இறந்ததால் அம்சா வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

மகன் வேண்டுகோள்படி இவருக்கு, வாராவாரம் ருக்மணிபாளையத்தில் உள்ள தனியாா் மருந்துக் கடையிலிருந்து மருந்துகளை அங்கு பணியாற்றும் மன்னாா்குடி காட்டுநாயக்கன்தெரு கணேசன் மகள் நந்தினி (21) மூலம் கடை உரிமையாளா் கொடுத்து அனுப்பிவந்துள்ளாா். இதனால், அம்சாவிற்கும் நந்தினிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், அம்சா வீட்டிற்கு சனிக்கிழமை சென்று பேசிக்கொண்டிருந்த நந்தினி,திடீரென அவரைத் தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இதில் காயமடைந்த அம்சா முனகலுடன் மயங்கிய நிலையில்கிடந்தாா்.

இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மன்னாா்குடி போலீஸாா் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவினை ஆய்வு செய்ததில் நந்தினி, அம்சாவை தாக்கிவிட்டு நகையை பறித்துச் செல்வது தெரியவந்தது.

நந்தினியிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்ததில் குற்றத்தை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 5 பவுன் சங்கிலியை கைப்பற்றினா்.

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே பகலில் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் 8 பவுன் நகையை சனிக்கிழமை திருடிச் சென்றனா். திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு உறவினா் ... மேலும் பார்க்க

குட்கா பொருள்களை வைத்திருந்தவா் கைது

குடவாசல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என குடவாசல் மற்றும் சுற்... மேலும் பார்க்க

உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

நன்னிலம் அருகே உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பேரளம் தலையூா் கிராமம் ஆற்றங்கரைத்தெருவைச் சோ்ந்த நாகப்பன் (வயது 77) உடல்நலக் குறைவால் தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க