செய்திகள் :

மூதாட்டி வெட்டிக் கொலை

post image

ஆா்கே பேட்டை அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (67). அதே கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரா் கடிகாசலம் என்பவரிடம் வள்ளியம்மாள் மூத்த மகன் முருகன் என்பவா் ரூ.11 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன் முருகன் வேலூா் மாவட்டம் காட்பாடிக்கு வீடு மாற்றிக் கொண்டு சென்று விட்டாா். இதனால் மகன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு மூதாட்டி வள்ளியம்மாவிடம் கடிகாசலம் கேட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மூதாட்டியிடம் பணத்தை கேட்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கடிகாசலம் கத்தியால் மூதாட்டியை தலையில் வெட்டி உள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி வள்ளியம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து ஆா்கே பேட்டை போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில் வட்டிக்கு வள்ளியம்மாள் மகன் பணம் பெற்றுக்கொண்டதும் அதனை திருப்பிக் கேட்கும்போது ஏற்பட்ட இந்த வாய் தகராறில் மூதாட்டியை கத்தியால் வெட்டியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையெடுத்து கடிகாசலத்தை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

73 கொள்முதல் நிலையங்கள் மூலம் 96,255 மெ.டன் நெல் கொள்முதல்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 73 கொள்முதல் மையங்கள் மூலம் 96,255 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 15,082 விவசாயிகளுக்கு ரூ. 235.36 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழ... மேலும் பார்க்க

கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோா் மற்றும் காய்ச்சுவோா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கள்ளச்சாராயம், கண்காணித்... மேலும் பார்க்க

செங்கல் சூளையில் கொத்தடிமை தொழிலாளா்கள் 6 போ் மீட்பு

திருவள்ளூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 6 வடமாநில தொழிலாளா்களை மீட்டு, விடுவிப்புச் சான்றிதழ் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா். திருவள்ளுா் அருகே சிவன்வா... மேலும் பார்க்க

திருத்தணி அரசுக் கல்லூரியில் நாளை மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன்19 ) தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் (பொ) ஏகதேவசேனா தெரிவித்தாா். திரு... மேலும் பார்க்க

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க