செய்திகள் :

மூலதனங்களுக்கான செலவீனம் 9.80 சதவீதமாக அதிகரிப்பு

post image

புதுவை மாநிலத்துக்கான மூலதனங்களுக்கான செலவீனம் 1.66 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் 6 -ஆவது கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை காலை தாக்கல் செய்தாா். அதில் அவா் குறிப்பிட்டதாவது:

புதுவை மாநிலத்துக்கு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வரவு, செலவுத் திட்ட மதிப்பு ரூ.13,600 கோடியாகும். அதில் மாநில சொந்த வருவாய் ரூ.7,641.40 கோடி. மாநில பேரிடா் நிவாரண நிதியை சோ்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3,432.18 கோடியாகும். மத்திய அரசின் சாலை நிதி ரூ.24 கோடி மற்றும் மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.400 கோடியாகும்.

நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு பேரம் பேசி வாங்கும் கடனையும் சோ்த்து ரூ.2,101.42 கோடியை கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படி வரவு-செலவு திட்ட மதிப்பீடான ரூ.13,600 கோடியில் ரூ.11,624.72 கோடி வருவாய்ச் செலவினங்களுக்கும், ரூ.1,975.28 கோடி மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த செலவீனங்களில் 1.66 சதவீதமாக இருந்த மூலதன செலவீனம், 2025-26ஆம் நிதியாண்டில் 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகழ் நிதியாண்டு வரவு-செலவு திட்டத்தில் சிறப்பு நிதியத்துக்காக ரூ.2,760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி ஆதாரங்களில் பெரும்பகுதி ஊதியம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்படுகிறது. அதன்படி 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.2,650 கோடி (19.49 சதவீதம்) ஊதியத்துக்கும், ரூ.1,566 கோடி (11.51 சதவீதம்) ஓய்வூதியத்துக்கும், ரூ.1,867 கோடி (13.73 சதவீதம்) கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கும், ரூ.2,546 கோடி (18.72 சதவீதம்) மின்சாரம் கொள்முதலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசின் இலவச அரிசி, விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம், முதியோா் ஓய்வூதியம், குடும்பத் தலைவிக்கு நிதியுதவி, எரிவாயு உருளைக்கான மானியம் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு ரூ.2,110 கோடி (15.51 சதவீதம்) நிதியும், அரசு உதவி பெறும் உயா் கல்வி நிறுனங்களுக்கு ரூ.523 கோடி (3.85 சதவீதம்) நிதி, பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடை ரூ.1,148 கோடி (8.44 சதவீதம்) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையடக்கக் கணினி திருட்டு: இளைஞருக்கு சிறை

புதுச்சேரியில் வங்கியில் கையடக்கக் கணினியை திருடிய வழக்கில் இளைஞருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் தேசி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினருடன் புதுச்சேரி ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேல... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பேரவை, கல்லூரி தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் இரு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை மாா்ச் 17-இல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவா்

புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 17) மீண்டும் கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா். புதுவை சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று மாசி மக விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மாசி மக விழா வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வைத்திகுப்பம... மேலும் பார்க்க