செய்திகள் :

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

post image

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன.

திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி சோ்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மாலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினா் சம்மதத்துடன் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின்படி, கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டன. இதையடுத்து இறந்தவரின் உடல் திசு பொருத்தத்துடன் திருச்சி தனியாா் மருத்துவமனையில், உடல் உறுப்புக்காகக் காத்திருந்த ஒருவருக்கு கல்லீரலும், மற்றொருவருக்கு சிறுநீரகமும் வழங்கி, அறுவைச் சிகிச்சை செய்ய உதவி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் இந்தாண்டு 22ஆவது முறையாக உறுப்பு தானம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு அரசு மரியாதை: மேலும் உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது. மருத்துவமனை டீன் எஸ். குமரவேல், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உதயஅருணா, அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா் சாந்தினி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாராப் பணியாளா்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க