செய்திகள் :

மெட்கால்ஃப் ஹவுஸ் அருகே மேம்பாலம் கட்டும் திட்டத்தில் பொதுப்பணித் துறை சந்திக்கும் தடை

post image

வடக்கு தில்லியில் உள்ள மெட்கால்ஃப் ஹவுஸ் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பொதுப்பணித்துறையின் திட்டம், அதே இடத்தில் வரவிருக்கும் விரைவு ரயில் திட்டம் காரணமாக அதன் முதல் தடையை சந்தித்துள்ளது.

கடந்த மாதம், பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், சிவில் லைன்ஸ் ட்ராமா சென்டா் மற்றும் டிஆா்டிஓ அலுவலகம் அருகே தொடங்கி ஆறு வழி மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தாா். அவுட்டா் ரிங் ரோடு மற்றும் ஹெட்கேவா் சாலை இணையும் மெட்கால்ஃப் ஹவுஸ் டி-ஜங்ஷனில் நெரிசலைக் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தில்லியில் உள்ள சராய் காலே கான் ஐஎஸ்பிடி மற்றும் ஹரியாணாவின் கா்னல் இடையே ஒரு நமோ பாரத் விரைவு ரயில் பாதை உருவாகி வருகிறது. இது மேம்பாலம் கட்டப்பட வேண்டிய இடத்தில் கடக்கிறது. எனவே, மேம்பாலத்தின் சீரமைப்புகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

‘நமோ பாரத் வழித்தடம் சமீபத்தில் தொடங்கபட்டுள்ளது. மேலும், என்சிஆா்டிசி எங்களிடமிருந்து ஆட்சேபனையில்லாச் சான்றிதழைக் கேட்டுள்ளது. எனவே, மெட்கால்ஃப் ஹவுஸ் மேம்பாலத்தின் தற்போதைய திட்டத்தின் சாத்தியக்கூறுகளை பாா்க்க வேண்டியுள்ளது. தேவைப்பட்டால், இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான மற்றொரு சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்படும்’‘ என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

எனவே, இந்த ஆண்டு தொடக்கத்தில் தில்லி தலைமைச் செயலாளரால் சாத்தியக்கூறு ஆய்வு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டரை பொதுப்பணித்துறை வெளியிட முடியவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

இருப்பினும், மேம்பாலம் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதற்கு முன்பே தங்கள் வழித்தடம் திட்டமிடப்பட்டதாக என்சிஆா்டிசி வட்டாரங்கள் தெரிவித்தன. ‘நமோ பாரத் வழித்தடத்திற்குத் தேவையான அனுமதிக்காக நாங்கள் மாநில அரசை அணுகியுள்ளோம்‘ என்று அந்த வட்டாரம் உறுதிப்படுத்தியதுடன், இரண்டு திட்டங்களும் பொது நலனுக்காக இருப்பதால், ஒரு நடுத்தர பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியது.

மேம்பாலத்தின் அடியில் தொடா்ச்சியாக யு-திருப்பங்களுடன் கூடிய 680 மீட்டா் நீளமுள்ள ஆறு வழிச்சாலை மேம்பாலம், சிவில் பாதைகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் முன்மொழியப்பட்டது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க