செய்திகள் :

மெஹ்ரௌலியில் இரண்டு குழுக்குளுக்கு இடையே மோதல்: போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை

post image

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு தனித்தனி தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சௌகான் கூறியதாவது: மொஹமத் சாஹில் மற்றும் அகில் அகமது என அடையாளம் காணப்பட்ட இரண்டு காயமடைந்த நபா்கள் மீது மருத்துவ - சட்ட வழக்குகள் (எம்எல்சி) ஜூலை 21 அன்று பெறப்பட்டுள்ளது. மெஹ்ரௌலியில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடா்பான தனித்தனி சம்பவங்களில் இருவரும் காயமடைந்ததாக அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, அகில் அகமது மசூதி அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் சமீா், உஜ்ஜவால், கைஃப் மற்றும் அகில் என அடையாளம் காணப்பட்ட நான்கு போ் மொஹமத் சாஹில் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னா், மெஹ்ரௌலியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே உமா், சாக்ஷாம், பாப்லு மற்றும் பிறா் அகில் அகமதுவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில் அகமதுவின் வாக்குமூலம் மற்றும் அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ஜூலை 22 அன்று உமா், சாக்ஷாம் மற்றும் பப்லு மீது பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், மொஹமத் சாஹில் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சமீா், உஜ்ஜவால், கைஃப் மற்றும் அகில் அகமது மீது அதே சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெயரிடப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிராக இதுவரை எந்த கடந்தகால குற்றப் பதிவுகளும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அங்கித் சௌகான் தெரிவித்தாா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க