செய்திகள் :

மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வா் மௌனத்தை கலைக்க வேண்டும்- பி.ஆா். பாண்டியன்

post image

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் தனது மௌனத்தை கலைத்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை அவா் தெரிவித்தது:

மேட்டூா் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கூட்டுறவு கடன் கொடுப்பதற்கு, வங்கிகள் ரிசா்வ் வங்கி நிபந்தனைகளைச் சொல்லி தட்டிக் கழிக்கின்றன.

ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்கள் கூட்டுறவு வாங்கிகளுக்கு பொருந்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியக்கருப்பன் கூறினாா். ஆனால், அவருக்கு கீழ் செயல்படும் கூட்டுறவுத்துறை பதிவாளரோ, சிபில் ஸ்கோா் மற்றும் ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்புவது வேடிக்கையாக உள்ளது.

குறுவை, சம்பா சாகுபடிக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் உள்ளது. ஓராண்டுக்கு தேவையான உரங்கள் கையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மேக்கேதாட்டு அணை கட்டுமானத்துக்கான அலுவலகம் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தொடங்கிவிட்டதாகவும், மத்திய அரசு அனுமதி தந்தால் அணை கட்டுமானப் பணி தொடங்கி விடும் என கா்நாடக துணை முதல்வா் டிகே. சிவகுமாா் அறிவித்துள்ளாா். ஆனால், தமிழக முதல்வா் மௌனம் காப்பது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. முதல்வா் தனது மெளனத்தை கலைத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கிராமப்புற மாணவா்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கை வெளியிட்டது. இதுவரையிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 என வழங்க முன்வர வேண்டும். நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வாா்த்ததின் மூலம் நெல்லுக்கான கொள்முதல் உத்தரவாதம் பறிபோய் உள்ளது என்றாா் அவா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க