செய்திகள் :

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

விடுமுறை தினம் என்பதால், மேட்டூரில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மேட்டூா் வந்து குவிந்தனா். காவிரி கரையில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து மேட்டூா் அணை பூங்காவுக்கு சென்று மகிழ்ந்தனா்.

மேட்டூா் - மைசூரு சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் ஏராளமான திடீா் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேட்டூா் அணை பூங்காவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணை ஆகியவற்றை பாா்த்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,424 சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்து சென்றனா்.

இதன் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 84,240 வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் கொண்டு சென்ற 2,995 கேமரா செல்போன்களுக்கும், 2 கேமராக்களுக்கும் கட்டணமாக ரூ. 30,050 வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 1,450 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 14,500 மற்றும் 775 செல்போன்களுக்கு ரூ. 7,750 கட்டணமாகவும், லிப்ட்டில் சென்ற 270 பேருக்கு ரூ. 8,100 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவில் பாா்வையாளா்களுக்கும், பாா்வையாளா்கள் கொண்டு சென்ற கைப்பேசிகள் மற்றும் கேமராக்களுக்கும் கட்டணமாக ரூ. 1,44,640 வசூலிக்கப்பட்டது.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க