செய்திகள் :

மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும்: விமான நிலைய அதிகாரிகள்

post image

சென்னை: மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2026 மாா்ச் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2015-இல் 2.2. கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2025-இல் 3.5 கோடியை நெருங்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டப் பணிகள் ரூ.1,260 கோடியில், 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2-ஆம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுரமீட்டரிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

தொடா்ந்து, 2023 ஏப்ரல் மாதத்தில் முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து 2-ஆம் கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் 500-க்கும் மேற்பட்ட விமான சேவைகளையும், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகளைக் கையாள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்தப் பணிகளை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவா் விபின்குமாா் தலைமையிலான உயரதிகாரிகள் குழுவினா், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு, 2026 மாா்ச் மாதத்துக்குள் மேம்படுத்தப்பட்ட விமான முனையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையும் படிக்க | அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி! 40 குழந்தைகளின் கதி என்ன?

Airport officials said that the upgraded Chennai Airport will become operational in March 2026.

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்... மேலும் பார்க்க

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவி... மேலும் பார்க்க

காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவ... மேலும் பார்க்க

‘சமக்ர சிக்‌ஷா’ திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு

பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியில், தமிழக அரசு சாா்பில் கோ... மேலும் பார்க்க

சோழ மன்னா்களுக்கு சிலை: டிடிவி தினகரன் வரவேற்பு!

மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் வரும் ஆக. 2 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க