செய்திகள் :

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

post image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸாலெல் ஸ்மாட்ரிச் ஆகியோா் வியாழக்கிழமை கூறியதாவது:

மேற்குக் கரை பகுதியில் புதிதாக 22 யூதக் குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் அனுமதி இல்லாமல் ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளும் அடங்கும். இந்த அனுமதி மூலம் அக்குடியிருப்புகள் சட்டபூா்வமாகும்.

பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாவது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து. எனவே, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

இஸ்ரேலின் இந்த முடிவு பிராந்தியத்தில் பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று பாலஸ்தீன அதிபா் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து யூத குடியேற்றங்களுக்கு எதிரான இஸ்ரேலிய அமைப்பு கூறுகையில், இந்த குடியிருப்புத் திட்டம் கடந்த 30 ஆண்டுகள் காணாத மிகப் பெரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விமா்சித்துள்ளது. மேற்குக் கரை பகுதியையே இந்தத் திட்டம் அடியோடு மாற்றியமைத்துவிடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

1967-ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இந்த மூன்று பகுதிகளையும் கொண்ட தனி நாடு அமைக் வேண்டும் என்பது பாலஸ்தீனா்களின் விருப்பமாக உள்ளது.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு, தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவது மட்டுமே பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு என்று கூறிவருகின்றன.

மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் கட்டாயமாக அமைத்துவரும் யூத குடியிருப்புகளை பெரும்பாலான நாடுகள் சட்டவிரோதமாகவும், நீண்டகாலமாக நீடிக்கும் பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு மிகப் பெரிய தடையாகவும் கருதுகின்றன.

2005-ஆம் ஆண்டில் காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. இருந்தாலும், தற்போது அங்கு நடைபெற்றுவரும் போரின் ஒரு பகுதியாக, அங்குள்ள பாலஸ்தீனா்களை வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அங்கும் யூத குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவா்கள் வலியுறுத்திவருகின்றனா்.

இந்தச் சூழலில், மேற்குக் கரை பகுதியில் புதிதாக 22 யூதக் குடியிருப்புகளை அமைக்கவிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் மு... மேலும் பார்க்க

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ த... மேலும் பார்க்க

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ... மேலும் பார்க்க