செய்திகள் :

மேற்குவங்க இடைத்தேர்தல் TMC வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழிப்பு; மம்தா பானர்ஜி வருத்தம்

post image

மேற்கு வங்காளம் - காளிகஞ்ச், கேரளா - நிலம்பூர், குஜராத் - விசாவதர், குஜராத் - கடி, பஞ்சாப் - லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின.

பஞ்சாப் - லூதியானா தொகுதியில் ஆம் ஆத்மியின் சஞ்சீவ் அரோரா, குஜராத் - விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா, கேரளா - நிலம்பூரில் காங்கிரஸின் ஆர்யாடன் ஷௌகத், குஜராத் - கடி தொகுதியில் பாஜகவின் ராஜேந்திர சாவ்தா உள்ளிட்டோர் வெற்றிபெற்றுள்ளனர்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் கலிகஞ்ச் தொகுதியில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் அலிஃபா அகமது வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாட திரிணாமுல் காங்கிரஸினர் கலிகஞ்ச் தொகுதியில் மிகப்பெரிய வெற்றிக் கொண்டாட்ட அணிவகுப்பை நடத்தியிருக்கின்றனர். இதில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் வெடிகளை பொதுத்தெருக்களில் வெடித்துக் கொண்டாடியிருக்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் வீட்டின் அருகே இந்த வெடிகளை வெடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸின் இந்த ஆபத்து மிகுந்த ஆரவாரக் குண்டுவெடிப்புக் கொண்டாட்டத்தில் சிக்கி தமன்னா காதுன் என்ற சிறுமி படுகாயமடைந்து உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "கிருஷ்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள பரோசந்த்கரில் நடந்த குண்டுவெடிப்பில் சிறுமி இறந்தது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.

துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த இரங்களையும், அந்தச் சிறுமிக்காகவும், அவரின் குடும்பத்திற்காகவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தச் துயரச் சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸும், முதல்வர் மம்தா பானர்ஜியும் பொறுப்பேற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். சிறுமியின் இறப்பிற்கான காரணத்தை உறுதிபடுத்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் மாணவர்கள்... கண்டுகொள்ளுமா அரசு?

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு பகல் பாராமல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட... மேலும் பார்க்க

US Attack On Iran: ஈரானில் தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய 'GBU 57' என்றால் என்ன?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் பற்றி பெருமையாகப் பேசி வருகிறார் டொனால... மேலும் பார்க்க

மதிமுக: "2026-ல் கூடுதல் தொகுதிகளில் போட்டி" - பொதுக்குழு தீர்மானத்தின் பின்னணி என்ன?

மதிமுக-வின் 31-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று ஈரோட்டிலுள்ள பரிமளம் ஹாலில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு. செந்திலதிபன், முதன்மைச... மேலும் பார்க்க

Air India Violations: "3 அதிகாரிகளை நீக்க வேண்டும்; இனி இதுபோல நடந்தால்..." - DGCA எச்சரிக்கை!

விமான பாதுகாப்பைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation - DGCA) டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் 3 அதிகாரிகளை அனைத்து பதவிகள் மற்றும் ... மேலும் பார்க்க

ஊட்டி இந்தி பதாகை சர்ச்சை: சுட்டிக்காட்டிய விகடன்; கிழித்தெறிந்த ரயில்வே நிர்வாகம்; பின்னணி என்ன?

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஊட்டி ரயில் நிலையம் ஒன்றாகும்.பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகாசபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன்... மேலும் பார்க்க

Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி பேச்சு

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என 11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ... மேலும் பார்க்க