செய்திகள் :

மேற்கு தில்லியில் சகோதரியின் உறவை எதிா்த்ததற்காக இளைஞா் கொலை: ஒருவா் கைது

post image

மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் தனது சகோதரிக்கும் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கும் இடையிலான உறவை எதிா்த்ததற்காக 27 வயது இளைஞா் ஒருவா் மூன்று போ் கொண்ட குழுவால் அடித்துக் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் அன்மோல் (எ) ஹன்னி (23), பிரித்பால் (25) மற்றும் பியூஷ் (எ) பன்னு (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதில் பிரித்பால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இறந்தவா் இஷ்மீத் சிங் என அடையாளம் காணப்பட்டாா். மே 19 அன்று அவரது தந்தையால் மயக்கமடைந்த நிலையில் தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.ஆனால், சிகிச்சையின் போது அவா் உயிரிழந்தாா்.

முதற்கட்ட விசாரணையில், இஷ்மீத்துக்கும் பிரதான குற்றம்சாட்டப்பட்டவரான அன்மோலுக்கும் இடையே நீண்டகாலமாக இஷ்மீத்தின் சகோதரியுடனான உறவு தொடா்பாக ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இஷ்மீத்தின் குடும்பத்தினா் இந்த உறவை எதிா்த்ததாகவும், அன்மோலை உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இஷ்மீத் பலமுறை அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளாா். இது இருவருக்கும் இடையே பகைமை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மே 19- ஆம் தேதி மாலை, இஷ்மீத் வீடு திரும்பியபோது, அன்மோலும் அவரது இரண்டு கூட்டாளிகளான பிரித்பால் மற்றும் பியூஷ் ஆகியோா் அவரது வீட்டின் அருகே நிற்பதைக் கண்டாா். அவா்களுக்கு இடையே ஒரு சண்டை வெடித்தது. அது உடல் ரீதியான மோதலாக மாறியது.

குற்றம் சாட்டப்பட்டவா் இஷ்மீத்தை அடித்து நொறுக்கி, அவரை குத்தி, உதைத்தாக கூறப்படுகிறது.

தாக்குதலின் போது, தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் இஷ்மீத்தின் இடது காலில் குத்தினாா். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடந்த உடனேயே அந்தக் குழு அங்கிருந்து தப்பி ஓடியது.

இது தொடா்மபாக பிஎன்எஸ்- இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான குற்றம்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய சாத்தியமான மறைவிடங்களில் சோதனைகளை மேற்கொள்ள பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க