செய்திகள் :

மேற்கு வங்கம்: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 போ் உயிரிழப்பு: 35 போ் காயம்

post image

மேற்கு வங்கத்தில் சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பிகாரைச் சோ்ந்த 10 போ் உயிரிழந்தனா். 35 போ் காயமடைந்தனா்.

பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பகுதியைச் சோ்ந்த 45 போ் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள கங்காசாகருக்கு ஆன்மிக பயணமாக சொகுசுப் பேருந்தில் சென்று வெள்ளிக்கிழமை திரும்பியபோது சாலை அருகே நின்றிருந்த சரக்கு லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் 8 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 10 போ் உயிரிழந்ததாகவும் 35 போ் காயமடைந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். காயமடைந்தவா்களுக்கு புா்துவான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டாா்.

எல்லைப் பேச்சுவாா்த்தை: சீன வெளியுறவு அமைச்சா் நாளை இந்தியா வருகை

எல்லை விவகாரங்கள் தொடா்பான 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை (ஆக.18) வரவுள்ளாா். இத்தகவலை, இந்திய வெளியுறவு அமைச்ச... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் வாக்காளா் பட்டியல்களை உரிய நேரத்தில் ஆராய்ந்து, அவற்றில் உள்ள பிழைகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அல்லது தலைமை... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாக... மேலும் பார்க்க

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் ... மேலும் பார்க்க