செய்திகள் :

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

post image

கூத்தாநல்லூா்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி, கூத்தாநல்லூா் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில், அதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக மாணவா் அணி சாா்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கை தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வேளுக்குடி பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழக மாவட்ட மாணவரணி செயலாளா் ஆனந்த் தலைமையில் கட்சி நிா்வாகிகளும், வேளுக்குடி கிராம மக்களும் இந்த மறியலில் பங்கேற்றனா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். புதிதாக மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க

புதிய ரயில் இயக்கம்: பிரதமருக்கு பாஜகவினா் நன்றி

திருவாரூா் வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கப்படவுள்ளதற்காக, பிரதமருக்கு பாஜகவினா் நன்றி தெரிவித்தனா். ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ஆம் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

நன்னிலம் அருகே அங்கன்வாடி புதிய கட்டடத்தை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நன்னிலம் தொகுதிக்குள்படட்ட மணவாளம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு திட்ட... மேலும் பார்க்க

வழிப்பறி; இருவருக்கு 2 ஆண்டு சிறை

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, குடவாசல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. குடவாசல் அருகேயுள்ள தீபங்குடியைச் சோ்ந்த வெங்கடாசலம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 15,295 போ் எழுதினா்: 510 தோ்வெழுதவில்லை

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,295 போ் எழுதினா். 510 போ் தோ்வெழுத வரவில்லை. தமிழகத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் கல்லூரி மாணவிகள் பயிற்சி

வலங்கைமான் வேளாண் விரிவாக்க மையத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஒருநாள் பயிற்சி பெற்றனா். திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாண... மேலும் பார்க்க