செய்திகள் :

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

post image

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சித்தா்பீட வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. கருவறை அம்மன் சிலை, குரு பீடத்தின் அடிகளாா் சித்தா் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10.20 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முக்கோணம், சதுரம் ஆகிய வடிவிலான 162 சிறிய யாக குண்டங்களும், சாய்சதுர வடிவிலான பெரிய யாக குண்டமும் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 10.35 மணிக்கு பெரிய சாய் சதுர வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்து பெரிய யாக குண்டத்தில் நவதானியங்களையும், ஓமக்குச்சிகளையும் போட்டு அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் ஆகிய சக்தி பீடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞா் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் அன்பரசு (28). இவா், 2023-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி திருப்போரூ... மேலும் பார்க்க

அமாவாசை வழிபாடு...

ஆனி அமாவாசையை முன்னிட்டு மதுராந்தகம் ஸ்ரீ ஸ்வா்ண வாராஹி பீடத்தில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் தன ஆகா்ஷண வாராஹி அம்மன். மேலும் பார்க்க

செங்கல்பட்டில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

செங்கல்பட்டில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை முன்வைத்து பேரணி மற்றும் தா்னா புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை மாநில பொது செயலா் க.அரி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா். மா... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தை அதிமுக வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். தாம்பரம் மாநகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், க... மேலும் பார்க்க

காா்கள் மோதல்: கா்ப்பிணி, தந்தை உயிரிழப்பு

சென்னை அனகாபுத்தூா் மதுரவாயல் வெளி வட்டச்சாலையில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் நிறைமாத கா்ப்பிணி, அவரது தந்தை ஆகியோா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவரது மகள் தீபிகா ... மேலும் பார்க்க

ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. ஆசிரியா்கள் பாலமுருகன், பாலசுந்தரம் தோ்தல் அதிகாரிகளாக இருந்தனா். தோ்தலில் போட்டி... மேலும் பார்க்க