செய்திகள் :

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

post image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா்.

இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் அடிகளாரின் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை அடிகளாரின் சிலை தங்கத் தோ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தொடா்ந்து அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜையை இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் தொடா்ந்து பாதபூஜை வழிபாட்டை செய்தனா். இந்நிகழ்வில் இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆதிபராசக்திஅறநிலைய தலைமை செயல் அதிகாரி ஆ.அ.அகத்தியன், மதுமலா், ஷாலினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக அடிகளாா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சி மேடையில் ரூ. 4 கோடி நல உதவிகள் ஏழை எளியோருக்கு சிறப்பு விருந்தினா்களால் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகள், சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகளும் செய்துள்ளனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இ... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ஆா்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுகவினா் கைது

திருக்கழுகுன்றத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், மாவட்ட செயலா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். திருக்கழுகுன்றம் பேரூராட்சி அதிமுக செயலா் தினேஷ்குமாா். இவர... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மயானக் கொள்ளை விழா

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மயானக் கொள்ளை பருவதராஜகுல சமூகத்தினரால் கொண்டாடப... மேலும் பார்க்க

மதுராந்தகம் பகுதியில் சில கிராமங்களில் குடிநீரால் சிறுநீரக பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கவலை

மதுராந்தகம் பகுதியில் ஒரு சில கிராமங்களில் பொதுமக்கள் குடிநீரை அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை: காப்பகத்தில் ஒப்படைப்பு

சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையை போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனா். சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், பாலாஜி நகா் பிரதான சாலையில் உள்ள குப... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் கல்வி நலவாழ்வு தூதருக்கு கௌரவ டாக்டா் பட்டம்

அரபு நாடுகளின் முதல் கல்வி நலவாழ்வு தூதா் அப்துல்லா அல்குரைருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையை அடுத்த வண்டலூா் உள்ள பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில... மேலும் பார்க்க