செய்திகள் :

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் வரும் மே 1 -ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், எஃப்.எல் -3, எஃப்.எல் 4ஏ உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரா் மதுவிற்பனைக் கூடம் உள்ளிட்ட அனைத்தும் ஏப். 30- ஆம் தேதி இரவு 10 மணி முதல் மே 2 -ஆம் தேதி காலை 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவைமீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாட்டா் பவுன்சா் ஊா்தி

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட வாட்டா் பவுன்சா் ஊா்தி சேவையை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் உள்... மேலும் பார்க்க

தமிழ்ப் புதல்வன் திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 11,437 பேருக்கு உதவித்தொகை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதம்தோறும் ரூ. 1000 பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

அரூா்: அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் ஏப். 21-இல் உடல்நலக் குறைவால் காலமானாா். இதையெடுத்து, ... மேலும் பார்க்க

தென்னை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/கிருஷ்ணகிரி: காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினா் தருமபுரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ... மேலும் பார்க்க

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் பணிக்கான நேரடி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ... மேலும் பார்க்க

ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு

தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க