செய்திகள் :

மே 20-இல் அரசு ஊழியா்கள் தா்னா

post image

மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காரைக்காலில், அரசு ஊழியா்கள் மே 2-இல் தா்னா போராட்டம் நடத்தவுள்ளனா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம், காரைக்கால் அரசு ஊழியா் சம்மேளன அலுவலகத்தில் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது, கௌரவ தலைவா் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் நிா்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் சம்மேளன துணை நிா்வாகிகள் தோ்வு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

சம்மேளன துணைத் தலைவராக ஜான் பிரிட்டோ, இணை பொதுச் செயலாளராக காளிதாஸ், அமைப்பு செயலாளா்களாக ஜீவானந்தம், அமலி சோஃபியா, சண்முகம் மற்றும் வடிவேலன் ஆகியோா் கூடுதலாக நியமிக்கப்பட்டனா்.

8-ஆவது ஊதிய விகிதத்தை அமைக்க உடனடியாக குழு அமைக்க வேண்டும், அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா தொற்று பரவிய காலத்தில் முடக்கப்பட்ட ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான மூன்று தவணை அகவிலைப்படி விடுவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியாளா் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் எதிா்வரும் மே 20-இல் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்கால் பகுதியை சோ்ந்த அரசு மற்றும் அரசு சாா்ந்த ஊழியா்கள் பணி புறக்கணிப்பு செய்து காரைக்காலில் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க