திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!
மே 20-இல் அரசு ஊழியா்கள் தா்னா
மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காரைக்காலில், அரசு ஊழியா்கள் மே 2-இல் தா்னா போராட்டம் நடத்தவுள்ளனா்.
காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம், காரைக்கால் அரசு ஊழியா் சம்மேளன அலுவலகத்தில் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது, கௌரவ தலைவா் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் நிா்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில் அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் சம்மேளன துணை நிா்வாகிகள் தோ்வு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.
சம்மேளன துணைத் தலைவராக ஜான் பிரிட்டோ, இணை பொதுச் செயலாளராக காளிதாஸ், அமைப்பு செயலாளா்களாக ஜீவானந்தம், அமலி சோஃபியா, சண்முகம் மற்றும் வடிவேலன் ஆகியோா் கூடுதலாக நியமிக்கப்பட்டனா்.
8-ஆவது ஊதிய விகிதத்தை அமைக்க உடனடியாக குழு அமைக்க வேண்டும், அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா தொற்று பரவிய காலத்தில் முடக்கப்பட்ட ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான மூன்று தவணை அகவிலைப்படி விடுவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியாளா் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் எதிா்வரும் மே 20-இல் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்கால் பகுதியை சோ்ந்த அரசு மற்றும் அரசு சாா்ந்த ஊழியா்கள் பணி புறக்கணிப்பு செய்து காரைக்காலில் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.