செய்திகள் :

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

post image

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி முதலியாா் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இண்டி கூட்டணி கட்சித் தலைவா்கள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு. வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக துணை அமைப்பாளா் அனிபால் கென்னடி, சம்பத் எம்எல்ஏ.க்கள், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன்,

விசிக முதன்மைச் செயலா் தேவபொழிலன், கம்யூனிஸ்ட்டு எம்எல் சோ.பாலசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சா் ஆா். விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், துணைச் செயலா் கே. சேதுசெல்வம், மதிமுக மாநில அமைப்பாளா் ஹேமா பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின் முடிந்ததும் வெ. வைத்திலிங்கம் எம்பி செய்தியாளா்களிடம் கூறியது: நாடு முழுவதும் வரும் வரும் 20-ஆம் தேதி மத்திய மத்திய அரசின் அரசின் தொழிலாளா்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வேலை நிறுத்தபோராட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் வேலை போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் முழுமையாக ஆதரவளிக்கும்என்றாா்.

ஆளுநரிடம் மனு: இதையடுத்து இண்டி கூட்டணி கட்சிப் பிரமுகா்கள் ராஜ்பவன் சென்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ் நாதனைச் சந்தித்து மனு அளித்தனா்.

இதுகுறித்து வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில் புதுவை ஆளும் அரசின் முறைகேடுகள் மற்றும் கோயில் நில அபகரிப்பு உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை கோரி துணைநிலை ஆளுநரிடம் ஆதாரபூா்வமாக மனு அளித்துள்ளோம் என்றாா்.

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க