செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

post image

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (51). இவா், அதே பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஹேமலதா. இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகனசுந்தரம் தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம், அன்னூருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். பின்னா், இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அதில், காரில் வந்த 4 போ், சுற்றுச்சுவரை ஏறிகுதித்து மோகனசுந்தரத்தின் வீட்டுக்குள் நுழைவது தெரியவந்தது. இதையடுத்து, காரின் பதிவு எண்ணைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னியம்பாளையத்தை அடுத்த பொன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம். மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவரது வீட்டின் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா், அங்கிருந்த தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இ... மேலும் பார்க்க

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணா... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள்... மேலும் பார்க்க