செய்திகள் :

மொண்டிபாளையம் வெங்டேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

post image

சேவூா் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப் பெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். திருப... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்பட 300 போ் கைது

திருப்பூா், பிப்.4: திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆதரவாளா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்குக்கு மாற்றும் பணி

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு மாற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 ச... மேலும் பார்க்க

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு பிரதான சா... மேலும் பார்க்க