செய்திகள் :

மொழி குறித்து அவதூறு: ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனை! வைரல் விடியோ

post image

மராத்தி மொழியை அவதூறாகப் பேசியதாக சிவசேனை கட்சியைச் (உத்தவ் பிரிவு) சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கடை உரிமையாளர் ஒருவர் மராத்தியில் பேசவில்லை என மகாராஷ்டிர நவநிர்மான் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கும் விடியோ கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில், மராத்தி மொழியை தவறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநர் மீதும் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், மொழியை வைத்து உருவாகும் மோதல் மகாராஷ்டிரத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதிக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குடிபெயர்ந்துள்ளார். அவர், மராத்தி குறித்தும் மராத்தி தலைவர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த சிவசேனை கட்சியினர் அவரை கன்னத்தில் சரமாரியாக அறைகின்றனர். பின்னர், பொதுவெளியில் இதற்காக மன்னிப்பு கோரவும் வலியுறுத்துகின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ''சிவசேனை நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கும் விடியோவை் பார்த்தோம். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. அதனால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

உத்தவ் பிரிவைச் சேர்ந்த சிவசேனை கட்சியின் நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''மொழியை அவதூறாகப் பேசிய ஆட்டோ ஓட்டுநருக்கு தகுந்த பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு யாரேனும் மராத்தி மொழியையோ, மராத்தி தலைவர்களையோ, மகாராஷ்டிரத்தையோ தவறாகப் பேசினால், சிவசேனையின் பாணியில் பதிலடி கொடுக்கப்படும்'' எனக் கூறினார்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தாணே பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் மராத்தி மொழியைப் பேசவில்லை எனக் கூறி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனை கட்சியின் உறுப்பினர்கள் அவரைத் தாக்கினர். இச்சம்பவத்தைக் கண்டித்து கடையின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டு வாரங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது மொழிப் பதற்றத்தை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

Auto-rickshaw driver thrashed by Sena workers over 'anti-Marathi' remarks ; video goes viral

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க