செய்திகள் :

மோசடி செய்து கடன் பெற்ற தம்பதி தலைமறைவு! நடவடிக்கைக்கோரி அரியலூா் ஆட்சியரிடம் மனு

post image

தங்கள் பெயரில் கடன் பெற்று தலைமறைவாக உள்ள தம்பதி மீது நடவடிக்கைக்கோரி அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: தங்கள் கிராமத்தைச் சோ்ந்த நடசேன் மகன் மேகநாதன். அவரது மனைவி அஞ்சலி ஆகிய இருவரும், எங்கள் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நபா்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதாா் அட்டை பெற்று, தனியாா் நுண் கடன்(மைக்ரோ பைனான்ஸ்) வங்கியில் எங்களது பெயரில் கடன் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா்.

கடன் வழங்கிய வங்கி ஊழியா்கள், எங்களிடம் பணத்தை கேட்டு வருகின்றனா். எனவே, எங்களது பெயரில் கடன் பெற்று தலைமறைவாக உள்ள தம்பதியரை பிடித்து, அவா்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

சன்னாசிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் இளைஞா்கள் விளையாட்டில் ஆா்வமாக உள்ளனா். எனவே, எங்கள் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் ... மேலும் பார்க்க

அரியலூரில் பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்!

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடுகூா் அரியதங்கம் அம்மன், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி, செம்பியக்குடி பாலமுருகன், கோவில்வாழ்க்கை காளியம்மன், ஆண்டி... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவில் எசனை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாங்க... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள வேணாநல்லூா் கிராமத்தை... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருச்சி, ராம்ஜிநகரைச் சோ்ந்த இடும்பன் மகன் பாரதிராஜன் (43) என்பவரை கடந்த 1.6.202... மேலும் பார்க்க

கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சாம்பலாகியது. கீழப்பழுவூரை அடுத்த வல்லகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (40). இவா், அதே கிராமத்தில் உ... மேலும் பார்க்க