செய்திகள் :

மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!

post image

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க வரிகளுக்கு ஏற்றாற்போல சாலைகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.

தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் மூலம் சுங்க வரியாக 11,945 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவைவிட வசூலிக்கப்படும் சுங்க வரி அதிகமாக இருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது, ``ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி சுங்கச் சாவடி வசூலிக்கப்பட்டது. ஆனால், சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்போது, சாமானிய மக்கள் ஏன் அதனைச் செலுத்த வேண்டும்?

இதையும் படிக்க:மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ராஜஸ்தானில் பல தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் உள்ளன என்பதை அரசு அறிந்திருக்கிறதா? அத்தகைய சாலைகளில் சுங்க வரி வசூல் செய்வது குறித்து அமைச்சகம் விளக்கமளிக்க வேண்டும். சாலை கட்டுமான செலவைவிட அதிக சுங்கச்சாவடி வசூலித்த போதிலும், தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை மோசமாக உள்ளது.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. மோசமான சாலைகளுக்காக பயணிகள் ஏன் சுங்கச்சாவடி செலுத்த வேண்டும்? அதன் விளைவுகளை சாமானிய மக்கள் ஏன் சந்திக்க வேண்டும்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது

சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொலை செய்ததாக இரண்டு சகோதரர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர். தலைநகர் தில்லியில், சராய் ரோஹில்லாவின் ஹரிஜன் பஸ்தியில் உள்ள ரயில் பாதை அருகே கடந்த 17ஆம் தேதி அடையாளம்... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

6 நாள்களுக்குப் பிறகு, நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டது. நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கோட்வாலி, கணேஷ்பேத், தேஷில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், ... மேலும் பார்க்க

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் ந... மேலும் பார்க்க

உ.பி.: நிலத்தகராறில் கோழியைக் கொன்ற இருவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் த... மேலும் பார்க்க

தெலங்கானாவில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி- தூய்மைப் பணியாளர் பலி

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார். தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்... மேலும் பார்க்க

கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மே... மேலும் பார்க்க