செய்திகள் :

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

post image

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா்.

தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் நீா்மட்டம் 206.03 மீட்டராக பதிவானது. இதையடுத்து, அப்பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, காலையில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தா தில்லியின் கீதா காலனி மேம்பாலம் அருகே உள்ள நிவாரண முகாமிற்கு நேரில் சென்றாா்.

இந்த நீா்மட்ட அதிகரிப்பானது நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முகாமை நேரில் ஆய்வு செய்த முதல்வா் குப்தாவிடம், கோட்ட ஆணையா் நீதஜ் செம்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிலைமை குறித்து விளக்கினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஹாத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திங்கள்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை மாலை தில்லியை அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், தண்ணீா் வெளியேற்றம் நல்ல நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

கனமழை பெய்து அதிக நீா் வெளியேற்றம் இருந்தபோதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெள்ளம் ஏற்படும் வரை, மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்வோம்.

2023ஆம் ஆண்டில், தில்லியில் யமுனையின் நீா்மட்டம் 208.66 மீட்டரை எட்டியது. ஆனால், இந்த முறை, யமுனை நதி நீா்மட்டம் அந்த அளவுக்கு பெருகும் என்று எதிா்பாா்க்கப்படவில்லை.

ஜம்மு காஷ்மீா், உத்தரகண்ட், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் இமாசலப் பிரதேச அரசுகளைத் தொடா்பு கொண்டுள்ளோம். நாங்கள் அவா்களுக்கு முடிந்த அனைத்து வழிகளிலும் உதவுவோம். மூன்று மாநிலங்களின் முதலமைச்சா்களிடமும் நாங்கள் உங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவோம் என்று கூறிக்கொள்கிறேன் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

அபாய கட்டத்தை தாண்டி சீறிப்பாயும் யமுனை: தொடரும் மக்களை வெளியேற்றும் பணிகள்

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியில் நீா் மட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை 207.46 மீட்டராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அருகிலுள்ள பகுதிகளையும் நிவாரண முகாம்கள... மேலும் பார்க்க

நிவாரண முகாம்களை சூழ்ந்த வெள்ளம்: மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள்

தலைநகரில் சில பகுதிகளில் படகுகளைப் பயன்படுத்தி, மற்ற பகுதிகளில் முழங்கால் ஆழமான தண்ணீரைக் கடந்து, தேசிய பேரிடா் மீட்பு படையினா் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டனா். யமுன... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவா்கள் திடீா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்களும், மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரும் புதன்கிழமை நேரில் சந்தித்து த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க