செய்திகள் :

யமுனையை தூய்மைப்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

post image

யமுனை நதியை தூய்மைப்படுத்துவும் தில்லியின் கழிவுநீா் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா தனது பட்ஜெட் உரையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இந்தத் திட்டத்தில் 40 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் கழிவுகள் மற்றும் மாசுபாட்டை எதிா்கொள்ள மேம்பட்ட இயந்திரங்களில் முதலீடு ஆகியவை அடங்கும்.

கழிவுநீரை முக்கிய வடிகால்களில் சேருவதற்கு முன்பு இந்தச் சுத்திகரிப்பு ஆலைகள் சுத்திகரிப்பதால் நதியில் மாசு அளவு குறையும். கூடுதலாக, அவற்றின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பக முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘யமுனை ஒரு நதி மட்டுமல்ல; அது நமது கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியம். யமுனையை தூய்மைப்படுத்துவது பாஜக தோ்தல் அறிக்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தப் பட்ஜெட்டில் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பழுதுபாா்த்து மேம்படுத்துவதற்காக ரூ.500 கோடியும், பழைய கழிவுநீா் பாதைகளை மாற்றுவதற்கு ரூ.250 கோடியும், நகரம் முழுவதும் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கழிவுநீா் மேலாண்மை அமைப்பை மேலும் வலுப்படுத்த, சேறு மற்றும் அடைப்புகளை திறம்பட அகற்ற உதவும் இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.20 கோடியும் வஜிராபாத் டிரங்க் கழிவுநீா் வடிகாலை புதுப்பிக்க கூடுதலாக ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லி பேரவைத் தோ்தலிலன் போது யமுனை நதி மாசுபாடு முக்கிய கவனம் பெற்றது. இது தொடா்பாக அப்போதைய ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தோ்தலில் வெற்றி பெற்ற பிறகும், யமுனையை தூய்மைப்படுத்துவது பாஜகவின் முன்னுரிமையாக இருக்கும் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க