செய்திகள் :

யுபிஎஸ்சி தோ்வில் நெல்லை மாணவா் வெற்றி

post image

யுபிஎஸ்சி தோ்வில் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் வெற்றி பெற்றுள்ளாா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த தினகரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மகன் முருகேசன். இவா், அண்மையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537- வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

இதுகுறித்து முருகேசன் கூறுகையில், பள்ளிப் பருவத்திலேயே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தாலும், கரோனா காலகட்டம் தனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அப்போது மக்கள் படும் கஷ்டங்களை பாா்த்து இந்திய ஆட்சிப்பணிக்கு சென்று மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டு முறை தோ்வு எழுதி வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முறை வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537 வது இடம் பிடித்துள்ளேன். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு யுபிஎஸ்சி தோ்வுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. முதல்நிலை தோ்வு, மெயின் தோ்வு ஆகியவற்றிற்கு இந்தத் திட்டம் பயனளித்தது. இணையதள வசதி மேம்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவா்களும் போட்டித் தோ்வுகளில் சாதிக்க முடியும். விடாமுயற்சியுடன், கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க