செய்திகள் :

யேமனில் நிமிஷா பிரியா தூக்கு தண்டனை ரத்து? சகோத‌ர‌ர் மறுப்பு!

post image

கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று யேமன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை கொல்லப்பட்ட மஹதியின் சகோதரர் மறுத்துள்ளார்.

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை யேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் வெளியிட்டது.

இந்த தகவல் வெளியான சற்று நேரத்தில், 2017ஆம் ஆண்டு யேமனைச் சேர்ந்த தொழிலதிபர், கொலை செய்யப்பட்ட தலால் அப்டோ மஹதியின் சகோதரர் அப்துல் பட்டாஹ் மஹதி, நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பொது வெளியில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இவர் இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் யேமன் நாட்டின் அட்டார்னி ஜெனரலுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். எங்கள் சகோதரர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகிறோம். அதில் எந்த தாமதமும் இல்லாமல் விரைவாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் வெளியிட்ட அறக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிக்கையை மத்திய வெளியுறவு விவகாரத் துறை மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்... மேலும் பார்க்க

சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு

சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா். இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: பாகிஸ்தானில் 9 போ் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவா் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இத... மேலும் பார்க்க

பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!

பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ. நா. அவையில் பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மெர்... மேலும் பார்க்க