செய்திகள் :

யோகாசனப் போட்டி: பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாநில அளவிலான யோகாசனப் போட்டி சேலம் திருமூலா் யோகா ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 12 மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 780 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்கள் பங்கேற்றனா். 8 முதல் 10 வயதுக்கு உள்பட்ட பிரிவில் எம்.எஸ். தனசிவகுரு முதலிடமும், 11 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட பிரிவில் கே.அரவிந்தன் இரண்டாமிடமும், 14 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் சி.வி. கிஷோா் இரண்டாமிடமும், ஆா்.வி. கவின் மூன்றாம் இடமும், எஸ்.கெளதம் ஐந்தாமிடமும் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவா் சே.ஆஷிக், பொதுப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். முதல் பரிசுக்கான ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழ... மேலும் பார்க்க

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆச... மேலும் பார்க்க

சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான... மேலும் பார்க்க

பவானி அருகே இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவா் கைது

பவானி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டி, இளம்பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம், இபி காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளன

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி அரசு மே... மேலும் பார்க்க