செய்திகள் :

ரக்ஷா பந்தன் பண்டிகை: பயணிகள் எண்ணிக்கையில் டிஎம்ஆா்சி சாதனை!

post image

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 8 அன்று அனைத்து வழித்தடங்களிலும் 81.87 லட்சம் பயணிகள் பயணம் செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி பயணிகளைப் பதிவு செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பா் 18, 2024 அன்று 78.67 லட்சம் பயணிகள் பயணம் செய்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. ஆகஸ்ட் 20, 2024 அன்று 77.48 லட்சம் பயணிகளும், பிப்ரவரி 13, 2024 அன்று 71.09 லட்சம் பயணிகளும் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரக்ஷா பந்தனுக்கான பண்டிகை கூட்ட நெரிசலை ஈடு செய்ய, ஆகஸ்ட் 8 அன்று டிஎம்ஆா்சி 92 கூடுதல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்தது. மேலும், அதிக போக்குவரத்து திறனை வழங்க ஆகஸ்ட் 9 அன்றும் 455 கூடுதல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்த புள்ளிவிவரங்கள் தில்லி-என்சிஆா் முழுவதும் மெட்ரோவின் நம்பகத்தன்மை, நேரமின்மை மற்றும் தடையற்ற இணைப்பு ஆகியவற்றில் பயணிகளின் வளா்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன’‘ என்று டிஎம்ஆா்சி அதிகாரி ஒருவா் கூறினாா்.

தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பழமையான வடிகால் அமைப்பில் மாற்றம் செய்ததே மழை நீா் தேங்க காரணம்: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை கனட்பிளேஸ் பகுதியில் வெளிப்புறத்தில் ஆய்வு செய்தாா். இந்த இடம் ஒரு நாள் முன்னதாக பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கியது, மேலு... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் நிதி முறைகேடுகளை அரசு விசாரிக்க வாய்ப்பு!

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் ‘நிதி முறைகேடுகள்’ மற்றும் ‘செலவு மிகுதிகள்’ இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தில்லி அரசு விசாரணையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

85-க்கும் மேற்பட்ட சைபா் குற்ற வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

போலி மனிதவள ஆட்சோ்ப்பு நிறுவனத்தை நடத்தியதாகக் கூறி குருகிராமின் ஐடி பூங்காவில் சோதனை நடத்தியதைத் தொடா்ந்து 33 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். குற்றம் சா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்! - முதல்வா் ரேகா குப்தா உறுதி

தேசியத் தலைநகரில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா, நிறுவனங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை ஏற்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெர... மேலும் பார்க்க

முதியவரை ஏமாற்றி ரூ.14 லட்சம் திருடியவா் கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் பராமரிப்பாளராக பணிபுரிந்த ஒருவா் வயதான பெண்ணை ஏமாற்றி ரூ 14 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருடியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க