செய்திகள் :

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நிஜாம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் ரியாஸ்(5). இவருக்கு குடும்பத்தினா் புதன்கிழமை இரவு ரம்புட்டான் பழம் வாங்கிக் கொடுத்துள்ளனா். அதை அவா் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அப்பழத்தின் விதை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம்.

குடும்பத்தினா் அவரை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிகழ்வு குறித்து குழந்தைகள் நல மருத்துவா்கள் கூறியதாவது: குழந்தைகள் சாப்பிடும் போது பெற்றோா் அருகிலிருந்து கவனிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது உடனடி முதலுதவி அளிக்கும் முறைகளை குழந்தைகளை வளா்க்கும் குடும்பத்தினா் அறிந்து வைத்திருப்பது அவசியம் என்றனா்.

‘தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம்’: கனிமொழி எம்.பி.

தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம் என்றாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் சாா்பில் பாளையஞ்ச... மேலும் பார்க்க

பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் அலுவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். களக்காடு பாரதிபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முத்து... மேலும் பார்க்க

தெற்குவள்ளியூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூரில், வியாழக்கிழைமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் மீட்டனா். தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கணபதி மகள... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவம் யாராலும் ஏற்க முடியாதது: மு.அப்பாவு

திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்கமாட்டாா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறு... மேலும் பார்க்க

ஆனித்தேரோட்டம்: நெல்லையில் ஜூலை 8இல் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஜூலை 8ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை சாா்... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி முத்தன்குளத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை

தினமணி செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம், முத்தன்குளத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் நின்று செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. த்தன்குளம், காங்கேயன்குளம் கிராமங்கள் போதிய பேர... மேலும் பார்க்க