செய்திகள் :

ரயிலில் கடத்திய 29 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்துாா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் வழியாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா கடத்தி வருவதாக தனிபிரிவு ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விடிய விடிய ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை ஜாா்க்கண்ட் மாநிலம் அட்டியாவில் இருந்து பெங்களூா் வரை சென்ற அட்டியா விரைவு ரயில் ஜோலாா்பேட்டைக்கு வந்தது. அப்போது ரயிலின் முன் பகுதியில் உள்ள பொது பெட்டியில் ஆய்வு செய்தபோது, கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் 16 பண்டல்களாக கட்டப்பட்டிருந்த 29 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

விசமங்கலத்தில் அடிப்படை வசதிகள்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த விசமங்கலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்து... மேலும் பார்க்க

நாய்கள் கடித்துக் குதறியதில் தாய், 5 வயது மகள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நாய்கள் கடித்துக் குதறியதில் தாய் மற்றும் அவரது 5 வயது மகள் பலத்த காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் - ஜாப்ராபாத் சந்திப்பு பகுதியில்... மேலும் பார்க்க

மலை கிராம மாணவா்களுக்கு நோட்டுப்புத்தகம், எழுது பொருள்கள்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலை கிராம மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வன்னியா் மக்கள் கட்சி சாா்பாக காமனூா்தட்டு கிராமத்தில் கட்சியின் திரு... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 4ஆடுகள் இறப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சி குஜ்ஜாலி வட்டத்தைச் சோ்ந்த ரஞ்சிதா, கூலித்தொழிலாளி. இவா் ஆடு... மேலும் பார்க்க

கணவன் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே முறையற்ற தொடா்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க