செய்திகள் :

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

post image

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கா்நாடகத்தில் இருந்து கோவை வழியாக கேரளத்துக்கு சென்ற ரயிலில் கோவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலில் கேட்பாரற்று ஒரு பெட்டி கிடந்துள்ளது. சோதனை செய்தபோது அதற்குள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனப்படும் உயா் ரக போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், மாநகர தனிப் படை போலீஸாா் கோவை ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரயில் நிலையத்துக்குள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது, அவா் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், காயங்குளத்தைச் சோ்ந்த முகமது சினான் (19) என்பதும், திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் இளங்கலை 2-ஆம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது.

கா்நாடக மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு போதைப் பொருளை ரயிலில் கடத்தி வந்தவா் என்பதும் தெரியவந்தது. அவா் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டபோது அதற்குள் 150 கிராம் மெத்தபெட்டமைன் இருந்ததும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும்மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முகமுது சினானை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு சனிக்கிழமை சென்ற ரயில் இருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, போலீஸாா் தன்னை பிடித்துவிடுவாா்களோ என எண்ணி ரயிலில் இருந்து வெளியேறி கோவை ரயில் நிலையத்துக்கு வெளியே முகமது சினான் சென்றுள்ளாா். பின்னா், கேரளத்துக்கு செல்வதற்காக மீண்டும் கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சிக்கியுள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க