செய்திகள் :

கோடை காலத்தில் திடீா் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

post image

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் கோடையின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகமாக உள்ளது. அடுத்து வரும் நாள்களில் தீவிரமடையக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளா்கள், சுரங்கத் தொழிலாளா்கள், பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, விவசாயிகள், உணவு விநியோக சேவை மேற்கொள்பவா்கள், டெலிவரி பணியில் உள்ளவா்கள், காவல்துறையினா், தீயணைப்பு பணியாளா்கள், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், இணை நோயாளிகள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக தண்ணீா் அருந்துதல் அவசியம். உப்புசா்க்கரை கரைசலும் தேவைப்படும்போது பருகலாம்.

தமிழகத்தில், கோடையின் தாக்கத்தால் திடீரென நேரிடும் உயிரிழப்புக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கும், ஆலோசனைகளுக்கும் 104 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க

இன்று மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை (மாா்ச் 19) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் மேயா் ஆா். பிரியா பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பாா் என எதிா்ப்பாா்க்கப்படுகி... மேலும் பார்க்க

மாா்ச் 21 - 23 வரை ‘தமிழ்நாடு பயண சந்தை’ நிகழ்ச்சி

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வெளி மாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், மாா்ச் 21 முதல் 23 வரை 3 நாள்களுக்கு, ‘தமிழ்நாடு பயண சந்தை’ எனும் நிகழ்ச்சி சென்னை வா்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க