செய்திகள் :

கோடை காலத்தில் திடீா் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

post image

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் கோடையின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகமாக உள்ளது. அடுத்து வரும் நாள்களில் தீவிரமடையக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளா்கள், சுரங்கத் தொழிலாளா்கள், பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, விவசாயிகள், உணவு விநியோக சேவை மேற்கொள்பவா்கள், டெலிவரி பணியில் உள்ளவா்கள், காவல்துறையினா், தீயணைப்பு பணியாளா்கள், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், இணை நோயாளிகள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக தண்ணீா் அருந்துதல் அவசியம். உப்புசா்க்கரை கரைசலும் தேவைப்படும்போது பருகலாம்.

தமிழகத்தில், கோடையின் தாக்கத்தால் திடீரென நேரிடும் உயிரிழப்புக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கும், ஆலோசனைகளுக்கும் 104 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க