செய்திகள் :

ரயிலில் மூதாட்டியின் தங்கத் தாலி பறிப்பு: இளைஞா் கைது

post image

குடியாத்தம் அருகே ரயிலில் மூதாட்டியின் தங்க தாலிச்சரடை பறித்துச் சென்ற இளைஞரை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியை சோ்ந்தவா் மயில்சாமி மனைவி வசந்தி(63). இவா் கடந்த வாரம் தனது பேரனை சென்னையில் உள்ள தனியாா் பள்ளியில் சோ்ப்பதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாா்.

தொடா்ந்து திங்கள்கிழமை சென்னையில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக பாலக்காடு விரைவு ரயிலில் பயணித்தாா்.

நள்ளிரவு 12 மணியளவில் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா் ஒருவா் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிச் சரடை பறித்துக் கொண்டு குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடினாா்.

இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையே தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த இளைஞா் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், ,அவா் வேலுாா் மாவட்டம், அணைக்கட்டு செதுவாலை அருகே நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த காா்த்திக் (36) எனவும், ரயிலில் வசந்தியிடம் தங்கத் தாலிச் சரடு பறித்தது தெரியவந்தது.

அதையடுத்து போலீசாா் காா்த்திகை கைது செய்து அவரிடம் இருந்த தாலிச் சரடை பறிமுதல் செய்தனா்.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க