செய்திகள் :

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

post image

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சங்கர்பல்லி என்ற இடத்தில் சாலையில் செல்வதற்கு பதில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டினார். அவர் சர்வ சாதாரணமாக தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றார். அவரை நிறுத்த ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் முயற்சி செய்தனர். ரயில்வே போலீஸார், ரயில்வே ஊழியர்கள் என 20 பேர் தண்டவாளத்தில் அப்பெண் ஓட்டிச்சென்ற காரை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். அப்பெண் நிற்காமல் காரை ஓட்டிக்கொண்டே இருந்தார். இச்சம்பவத்தால் அந்த வழியில் வரவேண்டிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன அல்லது அந்த ரயில்கள் வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது. அப்பெண் 6 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை தண்டவாளத்தில் ஓட்டிய பிறகு பிடிபட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை 20 பேர் சேர்ந்து விரட்டி பிடித்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி சந்தனா கூறுகையில், ''தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது. அவரிடமிருந்து டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அப்பெண் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், பன்னாட்டு நிறுவனத்தில் சமீப காலம் வரை வேலை செய்ததும் தெரிய வந்துள்ளது. தற்கொலை நோக்கத்தில் இது போன்று தண்டவாளத்தில் கார் ஓட்டினாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 முதல் 15 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூருவில் இருந்து ஐதராபாத் வந்த ரயில்கள் 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தன.

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் - என்ன நடந்தது?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்க... மேலும் பார்க்க

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மன அழுத்தமா கூமாபட்டிக... மேலும் பார்க்க

Rolls Royce: 1 வயது மகளுக்கு ரூ.5 கோடிக்கு கார் பரிசு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒரு வயது மகளுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சதீஷ் சன்பால் தன... மேலும் பார்க்க

"நான் அமன் சொத்து; என்னைத் தொட்டால் வெட்டுவேன்" - முதலிரவில் கத்தியைக் காட்டி கணவனை மிரட்டிய மனைவி

உத்தரப் பிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு வைத்தார்.சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி தேனிலவுக்... மேலும் பார்க்க

`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜேந்திர காவிட். பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜேந்திர காவிட் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு இரண்டு மனைவி இருப்பதை குறி... மேலும் பார்க்க