செய்திகள் :

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

post image

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை, சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சுமார் நான்கு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவின் பேரில் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்து கைது செய்தனர்

பின்னர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பாபுஜி (28) என்பதும் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.

இதையும் படிக்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Railway Protection Force police have arrested a youth who was involved in snatching a gold chain from a woman sitting at the Thiruvanmiyur railway station.

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.சென... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க