செய்திகள் :

ரஷியாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்!

post image

ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாள்களாக தீவிரமான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடும் நடத்தி வருகின்றது.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு மாகாணங்களைக் குறிவைத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இரவும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷியாவின் 10 மாகாணங்களை குறிவைத்து உக்ரைன் அனுப்பிய 105 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோ உள்பட ரஷியாவின் பல்வேறு மாகாணங்களில் விமான சேவை நேற்றிரவு 3 மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தை எடுத்துரைப்பதற்காக ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று பயணம் செய்த கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் சென்ற விமானமும் தரையிறங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

சில மணிநேரங்களில் இந்திய எம்பிக்கள் சென்ற விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்று பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய எம்பிக்கள் குழுவினர் இன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெ... மேலும் பார்க்க

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும், இந்தியா அல்லது வெளியே எங்கு உற்பத்தி செய்தாலும் 25 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

ஹார்வர்டு மாணவர்களை அழைக்கும் ஹாங்காங்! டிரம்ப் அரசை விமர்சிக்கும் சீனா!

ஹார்வர்டு பல்கலைக்கழக விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் மீது சீன அரசு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்பதற்... மேலும் பார்க்க

காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் ... மேலும் பார்க்க

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோ... மேலும் பார்க்க