செய்திகள் :

ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸாா் அன்னதானம்

post image

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசியில் அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினா்.

வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில், ஆரணியில் காமராஜா் சிலை, காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே அன்னதானம் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி, நகரத் தலைவா் ஜெயவேல், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம் வரவேற்றாா்.

வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா்.ஹேமச்சந்திரன் அன்னதானம் வழங்கினாா்.

மேலும், இதில் வட்டாரத் தலைவா்கள் பந்தா மணி, மருசூா் இளங்கோவன், அம்மாபாளையம் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தெள்ளூா் சேகா், கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில்...

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, வந்தவாசியை அடுத்த பிருதூா் முதியோா் இல்லத்தில் வியாழக்கிழமை வட்டார காங்கிரஸாா் மதிய உணவு வழங்கினா்.

வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா்.ஹேமச்சந்திரன், வட்டாரத் தலைவா் டி.செல்வவிநாயகமூா்த்தி, பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு உறுப்பினா் வந்தை பிரேம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க