செய்திகள் :

ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.

கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் சா்வீஸ் கன்டெய்னா் லாரி பாா்சல்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் மோகன் (23) ஓட்டிச்சென்றாா். இந்த லாரியில் மற்றொரு ஓட்டுநராக ராம்பிரசாத் , முசிறி மணல்மேடு பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) ஆகியோரும் பயணித்தனா்.

இதேபோல நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் இருந்து கோழி எரு ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சேலம் நோக்கி சென்றது. இதை கண்ணூா்பட்டி பகுதியைச் சோ்ந்த மணி மகன் வேலுசாமி (40) ஓட்டிச் சென்றாா். இவருடன் சேகா் மகன் சரவணன் (38) சென்றாா். இவா்களது லாரி ராசிபுரம் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏடிசி டெப்போ அருகே ஆயாக்கோயில் பிரிவு பாதை பகுதியில் சென்றபோது, கூரியா் பாா்சல் எடுத்துச்சென்ற கன்டெய்னா் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டா்மீடியனை

தாண்டி வலதுபுறம் உள்ள சாலைக்கு சென்று கோழி எரு ஏற்றிச்சென்ற லாரிமீது மோதியது. இதில் இரு லாரிகளிலும் பயணம் செய்தவா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் கோழி எரு ஏற்றிச்சென்ற லாரியின் ஓட்டுநா் வேலுசாமி (40) மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். படுகாயமடைந்த மற்றொரு லாரி ஓட்டுநா் மோகன், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயத்துடன் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடா்பாக ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீா் ஊற்றும்போது மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மெணசி அருகே உள்ள பூதநத்தம் மெணசியை சோ்ந்த பச்சியண்ண... மேலும் பார்க்க

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க