செய்திகள் :

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 நண்பர்கள் பலி!

post image

ராஜஸ்தானில் பனாஸ் ஆற்றில் குளித்த 8 நண்பர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 முதல் 35 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் கச்சா பந்து பகுதியிலுள்ள பனாஸ் ஆற்றில், இன்று (ஜூன் 10) மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். பின்னர், மற்ற இளைஞர்கள் உடனடியாக அவர்களை மீட்க முயற்சித்தபோது, அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு உயிருக்குப் போராடுபவர்களைக் கண்ட உள்ளூர்வாசிகள் அந்த இளைஞர்களில் 3 பேரை பத்திரமாக மீட்டு, காவல் துறை மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு விரைந்த மீட்புப் படையினர், ஆற்றில் மூழ்கிய 8 இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 8 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் நவ்ஷாத் (வயது 35), காசிம், ஃபர்ஹான், ரிஸ்வான் (26), பல்லூ, நவாப் கான் (28) மற்றும் சஜீத் (20) ஆகியோர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷாருக் (30), சல்மான் (26) மற்றும் சமீர் (32) ஆகியோர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், பலியான இளைஞர்களின் உடல்கள் உடற்கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தகவலறிந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர்.

ராஜஸ்தானில் கடந்த 3 நாள்களில் மட்டும் 14 பேர் ஆறு, அணை போன்ற நீர்நிலைகளில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும், தற்போது பலியான 8 இளைஞர்களின் குடும்பங்களுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஷோக் கெஹ்லோட் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க