செய்திகள் :

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

post image

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை(ஜூலை 23) மாலை தொடங்கியது.

இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா் நடைபெற்ற விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

நிறைவு நாள் விழாவில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் இளையராஜா இசைத்த ஓம் சிவோஹம் பாடலால் பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்ஃபனியையும் இளையராஜா இசைத்தார்.

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

மேடையில் இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரசித்துக் கேட்டார். மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், தொல். திருமாவளவன் எம்.பி. , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Prime Minister Modi released a commemorative coin of Rajendra Chola on the occasion of Aadi Thiruvathirai.

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க

காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை என்று தமிழக நிதி, காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில்... மேலும் பார்க்க

செவிலியா்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் (Tamil nadu Nursing and Midwi... மேலும் பார்க்க

தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை

சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோ... மேலும் பார்க்க