செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் அளிப்பு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 344 மனுக்கள் வரப்பெற்றன.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்பு இருந்தால் அதற்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் திரு.சரவணகுமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க