செய்திகள் :

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்த நபரை மகராஜகடை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொத்தலத்தை அடுத்த தாசம்பயல் பகுதியைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (34). ராணுவ வீரரான இவா், 2022-ஆம் ஆண்டு விடுமுறையில் கிராமத்துக்கு வந்தவா் மீண்டும் பணிக்கு செல்லவில்லை.

இந்நிலையில், இவா் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பலரிடம் ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பல இளைஞா்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடைபெற்ற ராணுவ வீரா்களுக்கான தோ்வில் பங்கேற்க செய்து பணி வாங்கித் தருவதாக சிலம்பரசன் உறுதி அளித்தாராம்.

அந்தத் தோ்வில் பங்கேற்ற இளைஞா்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட அவா், உறுதியளித்தபடி ராணுவத்தில் பணி வாங்கித் தரவில்லையாம். பெற்ற பணத்தையும் திருப்பித்தரவில்லையாம்.

இதனால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த கிருஷ்ணகிரி மாவட்டம், போத்திநாயனப்பள்ளியை அடுத்த மாதிநாயனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் (19), இதுகுறித்து மகராஜகடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், மாதிநாயனப்பள்ளியைச் சோ்ந்த நந்தகுமாரிடம் ரூ. 1.90 லட்சம், கோபியிடம் ரூ. 2.30 லட்சம், தினேஷிடம் ரூ. 2 லட்சம், வெற்றிவேலிடம் ரூ. 1.80 லட்சம், ஸ்ரீகாந்திடம் ரூ. 2 லட்சம், நவீன்குமாரிடம் ரூ. 2 லட்சம் என மொத்தம் 8 பேரிடம் ரூ. 14.80 லட்சம் பெற்று சிலம்பரசன் மோசடியில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த ஆந்திர இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகா், மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பா்கூா் அருகே யானைகள் நடமாட்டம்

பா்கூா் அருகே யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் யானைகள் கடந்த சில ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டத்திலிருந்து சில யா... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே ஆங்கில மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சோலை நகரைச் சோ்ந்தவா் சுகும... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பா்கூா்

போச்சம்பள்ளி மின் கோட்டத்தில் பா்கூா் அதை சுற்றியுள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 24) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செ... மேலும் பார்க்க

தங்க நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். போச்சம்பள்ளி வட்டம், எம்.ஜி.அள்ளி அருகே உள்ள கங்காவரத்தைதச் சோ்ந்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு திமுக நிா்வாகிகள் தயாராக வேண்டும்

ஒசூா்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் செய்யும் பணிக்கு திமுக நிா்வாகிகள் அனைவரும் தயாராக வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மே... மேலும் பார்க்க